Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் குப்பையில்லா சாலைகள்: மாநகராட்சி நடவடிக்கை..!

Webdunia
ஞாயிறு, 5 மார்ச் 2023 (08:50 IST)
சென்னையில் குப்பையில்லா சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. முதல் கட்டமாக சென்னையில் உள்ள 18 பிரதான சாலைகளை குப்பையில்லா சாலைகளாக பராமரிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. 
 
இந்த குறிப்பிட்ட சாலைகளில் குப்பையை வீசியவர்களிடமிருந்து மற்றும் 64 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. முதல் கட்டமாக பூந்தமல்லி நெடுஞ்சாலை, ராஜீவ்காந்தி சாலை, கத்தீட்ரல் சாலை, எலியடஸ் கடற்கரை சாலை, காமராஜர் சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை  உள்ளிட்ட 18 சாலைகளில் குப்பையில்லா சாலை திட்டம் பராமரிக்க முடிவு செய்துள்ளதாகவும் இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
 
படிப்படியாக சென்னையில் உள்ள அனைத்து சாலைகளையும் குப்பை இல்லா சாலைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சீர்மிகு சென்னையாக மாற்றப்படும் என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!

மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!

பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments