அரசு பள்ளிகளில் நுழைவுத் தேர்வா? - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

Webdunia
செவ்வாய், 7 மார்ச் 2023 (14:07 IST)
தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்படும் மாதிரி பள்ளிகளுக்கு மாணவர் சேர்க்கையில் எந்த விதமான நுழைவுத் தேர்வு நடத்தப்படாது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 
 
மாதிரி பள்ளிகளின் உறுப்பினர் சுதன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்னால் தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்பட உள்ள 15 மாதிரி பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். 
 
இதனை அடுத்து இந்த கருத்தை மறுத்துள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், எந்த வகுப்புக்க்கும் நுழைவு தேர்வு கிடையாது என்று தெரிவித்துள்ளார். மேலும் கல்வித்துறை சார்பாக ஏற்கனவே வெளியிடப்பட்ட உத்தரவு தவறாக வெளியிடப்பட்டு இருக்கிறது என்றும் மாணவர் சேர்க்கை குறித்த முறையான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments