Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு பள்ளிகளில் நுழைவுத் தேர்வா? - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

Webdunia
செவ்வாய், 7 மார்ச் 2023 (14:07 IST)
தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்படும் மாதிரி பள்ளிகளுக்கு மாணவர் சேர்க்கையில் எந்த விதமான நுழைவுத் தேர்வு நடத்தப்படாது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 
 
மாதிரி பள்ளிகளின் உறுப்பினர் சுதன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்னால் தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்பட உள்ள 15 மாதிரி பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். 
 
இதனை அடுத்து இந்த கருத்தை மறுத்துள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், எந்த வகுப்புக்க்கும் நுழைவு தேர்வு கிடையாது என்று தெரிவித்துள்ளார். மேலும் கல்வித்துறை சார்பாக ஏற்கனவே வெளியிடப்பட்ட உத்தரவு தவறாக வெளியிடப்பட்டு இருக்கிறது என்றும் மாணவர் சேர்க்கை குறித்த முறையான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஒரே இரவில் நான்கு கோவில்கள் உண்டியல் உடைப்பு- பல ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை

காட்டு யானை ரேஷேன் கடை கட்டிடத்தை உடைத்து கதவுகளை நொறுக்கி அட்டகாசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments