Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளே இல்லை: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (09:38 IST)
சென்னையில் கடந்த சில வாரங்களுக்கு முன் பல  நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் இருந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி சென்னையில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளே இல்லை என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
 
சென்னையில் தினமும் கொரோனா வைரஸ் பாதிப்பு சுமார் 1000 என்று இருந்து வரும் நிலையில் சென்னையில் இதுவரை 1,58,594 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 1,45,629 பேர் குணமடைந்து வீட்டதால் தற்போது வெறும் 9868 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
இந்த நிலையில் சென்னையில் ஒரு தெருவில் 5 பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அந்த பகுதி நோய் கட்டுப்பாடு பகுதி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்ததை அடுத்து தற்போது சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகளே இல்லை என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் சென்னை மக்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments