தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேச தடை நீக்கம்: மயிலாடுதுறை கோட்டாட்சியர் அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 8 மே 2022 (16:30 IST)
தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேச நிகழ்ச்சிக்கு தடை விதித்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பெற்று வந்த நிலையில் தற்போது அந்த தடை நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
தருமபுர ஆதீன பட்டணப் பிரவேச நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்படுவதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டிருந்தார் 
 
இந்த உத்தரவுக்கு தருமபுரம் ஆதின தரப்பிலிருந்தும் பாஜக தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தன. தடை இருந்தாலும் தடையை மீறி பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியை நடத்துவோம் என பாஜகவினர் கூறினார் 
 
இந்த நிலையில் நேற்று தமிழகத்தில் உள்ள ஆதினங்கள் தமிழக முதல்வரை சந்தித்த பிறகு தருமபுரம் ஆதின பட்டணப் பிரவேச விதிக்கப்பட்டிருந்த தடை வாய்மொழியாக நீக்கப்பட்டதாக கூறப்பட்டது
 
இந்த நிலையில் சற்று முன் தருமபுரம் ஆதின பட்டினபிரவேசத்திறி விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இதனை அடுத்து வரும் 22ஆம் தேதி தருமபுரம் ஆதினத்தை பல்லக்கில் தூக்கி வைத்து செல்லும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. ஒரு லட்சத்தை தொட இன்னும் 1040 ரூபாய் தான்..

விஜய்யின் ஈரோடு பொதுக்கூட்டம்.. தேதி, நேரத்தை அறிவித்த செங்கோட்டையன்..!

ரூ.45 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்தது.. 5 பேர் காயம்..!

நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவாக களமிறங்கிய 56 ஓய்வுபெற்ற நீதிபதிகள்: அரசியல்வாதிகளுக்கு கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments