தனித்து போட்டி: அதிமுக அமைச்சரின் அறிவிப்பால் அதிர்ந்த பாஜக

Webdunia
சனி, 19 ஜனவரி 2019 (22:40 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் பாஜகவுடன் இணக்கமாக இருந்த அதிமுக, தற்போது திடீரென நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜகவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. தம்பிதுரை, ஜெயகுமார் உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் பாஜகவை நேரடியாகவே விமர்சனம் செய்ய தொடங்கிவிட்டனர்

இந்த நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைப்பது சந்தேகமே என்ற ரீதியில் செய்திகள் வெளியாகியுள்ளது. அதிமுக கூட்டணி இல்லையென்றால் பாஜகவுடன் எந்த ஒரு சிறிய கட்சியும் கூட்டணி வைக்க வாய்ப்பே இல்லை என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி 21 தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுக தனித்தே போட்டியிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் பாஜக அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைவார்களா?!.. என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?!...

கோவை வந்த செங்கோட்டையன் பயணம் செய்த விமானம் பெங்களுருக்கு திருப்பிவிடப்பட்டது.. என்ன காரணம்?

'டிட்வா' புயலால் பாம்பனில் சூறைக்காற்று, தனுஷ்கோடியிலிருந்து மக்கள் வெளியேற்றம்!

பீகாரில் காங்கிரஸ் தோல்விக்கு காரணம் ராகுல், பிரியங்கா தான்: அகமது படேலின் மகன் பகீர் குற்றச்சாட்டு

வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு மாணவர்களை பயன்படுத்துவதா? ஆசிரியர்கள் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments