Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனித்து போட்டி: அதிமுக அமைச்சரின் அறிவிப்பால் அதிர்ந்த பாஜக

Webdunia
சனி, 19 ஜனவரி 2019 (22:40 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் பாஜகவுடன் இணக்கமாக இருந்த அதிமுக, தற்போது திடீரென நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜகவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. தம்பிதுரை, ஜெயகுமார் உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் பாஜகவை நேரடியாகவே விமர்சனம் செய்ய தொடங்கிவிட்டனர்

இந்த நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைப்பது சந்தேகமே என்ற ரீதியில் செய்திகள் வெளியாகியுள்ளது. அதிமுக கூட்டணி இல்லையென்றால் பாஜகவுடன் எந்த ஒரு சிறிய கட்சியும் கூட்டணி வைக்க வாய்ப்பே இல்லை என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி 21 தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுக தனித்தே போட்டியிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் பாஜக அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கர்நாடகா நிதியுதவி: பாஜக எதிர்ப்பு..!

8 பேரை விரட்டி விரட்டி கடித்த வெறிநாய்.. என்ன சொல்ல போகிறார்கள் நாய் பிரியர்கள்?

நடிகை பாலியல் புகார் எதிரொலி: இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜினாமா..!

தமிழகத்தில் ஒரு வாரம் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

தவெக மாநாட்டில் கட்டுக்கடங்காத கூட்டம்.. 10 பேர் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments