Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் கூட்டணிக்கு அதிமுக தான் தலைமையேற்கும்: அமைச்சர் ஜெயகுமார்

Webdunia
சனி, 19 ஜனவரி 2019 (22:25 IST)
வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு அதிமுக வலிமையான கூட்டணியை அமைக்கும் என்றும் அந்த கூட்டணிக்கு அதிமுகவே தலைமை வகிக்கும் என்றும் அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களாக பாஜக தலைமையிலான கூட்டணியில் அதிமுக உள்பட ஒருசில கட்சிகள் இருக்கும் என வதந்திகள் பரவியது. இதற்கு விளக்கம் அளித்த அமைச்சர் ஜெயகுமார், 'தேர்தல் கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை ஏற்கும். கட்சி அடையாளத்தை விட்டுக்கொடுக்க முடியாது' என்று கூறினார். மேலும் அதிமுக என்பது இமயம் என்றும் கூட்டணி அமைந்தால் அதற்கு இமயமான அதிமுகவே தலைமையேற்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் கடந்த காலங்களில் திமுக இரட்டை வேடம் கொண்டிருந்ததை மக்கள் அறிவர் என்றும், பாஜக உட்பட எந்த இயக்கத்துக்கும் அச்சப்படாத கட்சி தான் அதிமுக என்றும், எதற்காக அச்சப்பட வேண்டும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்,.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 திருமணமும் தோல்வி.. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்.. இளம்பெண்ணை கொலை செய்த அப்பா - மகன்..!

என் பிணத்தை நானே என் கண்ணால் பார்த்தேன்.. 8 நிமிடங்கள் இறந்து பின் உயிர் பிழைத்த பெண் பேட்டி..!

கணவன், குழந்தைகள், மாமனார், மாமியார்.. குடும்பத்தையே விஷம் கொடுத்து கொல்ல முயன்ற பெண்.. அதிர்ச்சி சம்பவம்..!

தென்னிந்தியர்கள் பொதுவான மொழியாக இந்தியை ஏற்று கொள்ள வேண்டும்: சந்திரபாபு நாயுடு

ParleG பிஸ்கட்ல இருக்க பொண்ணு நான்தான்! இழப்பீடு கொடுக்கணும்! - பகீர் கிளப்பிய பீகார் சிறுமி!

அடுத்த கட்டுரையில்
Show comments