Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் கூட்டணிக்கு அதிமுக தான் தலைமையேற்கும்: அமைச்சர் ஜெயகுமார்

Webdunia
சனி, 19 ஜனவரி 2019 (22:25 IST)
வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு அதிமுக வலிமையான கூட்டணியை அமைக்கும் என்றும் அந்த கூட்டணிக்கு அதிமுகவே தலைமை வகிக்கும் என்றும் அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களாக பாஜக தலைமையிலான கூட்டணியில் அதிமுக உள்பட ஒருசில கட்சிகள் இருக்கும் என வதந்திகள் பரவியது. இதற்கு விளக்கம் அளித்த அமைச்சர் ஜெயகுமார், 'தேர்தல் கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை ஏற்கும். கட்சி அடையாளத்தை விட்டுக்கொடுக்க முடியாது' என்று கூறினார். மேலும் அதிமுக என்பது இமயம் என்றும் கூட்டணி அமைந்தால் அதற்கு இமயமான அதிமுகவே தலைமையேற்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் கடந்த காலங்களில் திமுக இரட்டை வேடம் கொண்டிருந்ததை மக்கள் அறிவர் என்றும், பாஜக உட்பட எந்த இயக்கத்துக்கும் அச்சப்படாத கட்சி தான் அதிமுக என்றும், எதற்காக அச்சப்பட வேண்டும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்,.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments