Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கார் விபத்து என்ற தகவலில் உண்மையில்லை: துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்

கார் விபத்து என்ற தகவலில் உண்மையில்லை: துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்
, செவ்வாய், 30 மார்ச் 2021 (12:27 IST)
கார் விபத்து என்ற தகவலில் உண்மையில்லை:
எனது கார் விபத்துக்குள்ளானதாக வெளியாகியிருக்கும் தகவல் உண்மையில்லை என்றும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார் 
 
சபாநாயகர் தனபால், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் அமைச்சர் வேலுமணி சென்ற வாகனங்கள் விபத்தில் சிக்கியதாகவும் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு சென்ற போது இந்த விபத்து நடந்ததாகவும், கோவையில் இருந்து தாராபுரம் சென்றபோது டோல்கேட் அருகே இந்த விபத்து நடந்ததாகவும் செய்திகள் வெளியானது.
 
மேலும் இந்த விபத்தில் அமைச்சர் வேலுமணி, சபாநாயக தனபால், துணை சபாநாயகர் சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர்களுக்கு எந்த காயமும் இல்லை என்றும் கூறப்பட்டது 
 
இந்த நிலையில் தற்போது துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அவர்கள் இந்த செய்தி குறித்து விளக்கம் அளித்துள்ளார். எனது கார் விபத்துக்குள்ளானதாக வெளியாகும் தகவலில் உண்மை இல்லை என்றும் நான் பிரதமர் பங்கேற்கும் கூட்டத்திற்கு செல்லவில்லை என்றும் பொள்ளாச்சியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இல்லை என்றும் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துணை சபாநாயகர் சென்ற கார் விபத்து? – தாராபுரத்தில் பரபரப்பு!