Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எங்களுக்கு 3வது அணிமீது நம்பிக்கையில்லை: கே.எஸ். அழகிரி

Advertiesment
எங்களுக்கு 3வது அணிமீது நம்பிக்கையில்லை: கே.எஸ். அழகிரி
, வெள்ளி, 5 மார்ச் 2021 (06:33 IST)
மூன்றாவது அணி மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி தொடரும் என்றும் கேஎஸ் அழகிரி பேட்டி அளித்துள்ளார் 
 
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தையில் இழுபறியில் இருப்பதாக கூறப்பட்டது. இதனை அடுத்து காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி கமல் தலைமையிலான மூன்றாவது கூட்டணியில் இணையும் என்று கூறப்பட்டது 
 
ஆனால் செய்தியாளர்களை நேற்று சந்தித்த கே.எஸ்.அழகிரி மூன்றாவது அணி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் திமுகவுடன் கூட்டணி தொடரும் என்றும் பேச்சுவார்த்தை நடத்தி தங்களுக்கு தேவையான தொகுதிகளை கேட்டு பெறும் என்றும் கூறியுள்ளார் 
 
காங்கிரஸ் மேலிட பார்வையாளர் குண்டு ராவ் அவர்களும் இதே கருத்தை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடரும் என்று உறுதி செய்யப்பட்டாலும் எத்தனை தொகுதிகளை பெற்றுக்கொண்டு கூட்டணியில் தொடரும் என்பது இன்று இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

11.62 கோடியை தாண்டிய உலக கொரோனா பாதிப்பு!