Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென வேகமெடுத்த நிவர் புயல்: மணிக்கு 14 கிமீ வேகம் என தகவல்

Webdunia
புதன், 25 நவம்பர் 2020 (21:28 IST)
தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கும் நிவர் புயல் தற்போது அதிக வேகத்தில் வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
முதலில் மூன்று கிலோ மீட்டர் முதல் 5 கிலோ மீட்டர் வரை வேகத்தில் கரையை நெருங்கிக் கொண்டிருந்த நிவர் புயல் அதன்பிறகு 11 கிலோ மீட்டர் வேகத்தில் வந்தது. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி நிவர் 14 கிலோமீட்டர் வேகத்தில் வருவதாகவும் திடீரென புயலின் வேகம் அதிகரித்துள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
தற்போதைய நிலவரப்படி கடலூருக்கு 80 கிலோ மீட்டர் தொலைவில் நிவர் புயல் இருப்பதாகவும் சென்னையில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவிலும் புதுவையில் இருந்து 85 கிலோமீட்டர் தொலைவிலும் நிவர் இருப்பதாக தெரிகிறது 
 
நிவர் புயலின் வேகம் திடீரென அதிகரித்துள்ளதால் கணிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னரே கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் எப்போது நிவர் புயல் கரையை கடந்தாலும் அதன் தாக்கங்களை சந்திக்க தமிழக அரசும் பேரிடர் படையினரும் தயார் நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments