திடீரென வேகமெடுத்த நிவர் புயல்: மணிக்கு 14 கிமீ வேகம் என தகவல்

Webdunia
புதன், 25 நவம்பர் 2020 (21:28 IST)
தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கும் நிவர் புயல் தற்போது அதிக வேகத்தில் வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
முதலில் மூன்று கிலோ மீட்டர் முதல் 5 கிலோ மீட்டர் வரை வேகத்தில் கரையை நெருங்கிக் கொண்டிருந்த நிவர் புயல் அதன்பிறகு 11 கிலோ மீட்டர் வேகத்தில் வந்தது. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி நிவர் 14 கிலோமீட்டர் வேகத்தில் வருவதாகவும் திடீரென புயலின் வேகம் அதிகரித்துள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
தற்போதைய நிலவரப்படி கடலூருக்கு 80 கிலோ மீட்டர் தொலைவில் நிவர் புயல் இருப்பதாகவும் சென்னையில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவிலும் புதுவையில் இருந்து 85 கிலோமீட்டர் தொலைவிலும் நிவர் இருப்பதாக தெரிகிறது 
 
நிவர் புயலின் வேகம் திடீரென அதிகரித்துள்ளதால் கணிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னரே கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் எப்போது நிவர் புயல் கரையை கடந்தாலும் அதன் தாக்கங்களை சந்திக்க தமிழக அரசும் பேரிடர் படையினரும் தயார் நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா சீட்டுக்காக அதிமுக கூட்டணியா?!.. பிரேமலதா விளக்கம்!...

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

சீன பாஸ்போர்ட் கேட்டு அருணாச்சல பிரதேச பெண்ணை துன்புறுத்தவில்லை: சீனா மறுப்பு..!

என்னை வங்காளத்தில் குறிவைத்தால் மொத்த தேசத்தையும் குலுங்க வைப்பேன்: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments