Publish Date: Tue, 24 Nov 2020 (11:43 IST)
Updated Date: Tue, 24 Nov 2020 (11:45 IST)
வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் நாளை கரையை கடக்க உள்ள நிலையில் அவசர எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் இன்று மாலை தீவிர புயலாக மாற உள்ள நிலையில் நாளை மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நிவர் புயலால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் அவசர உதவிகளுக்கு மாநில அளவிலான உதவி எண் 1070, மாவட்ட அளவிலான உதவி எண் 1077 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. நிவர் புயலால் சென்னையில் பாதிப்பு ஏற்பட்டால் மக்கள் 1913 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். 044-2538 4530, 044-2538 4540 ஆகிய அவசர எண்களிலும் மக்கள் தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
மேலும் புயல் கரையை கடந்து விட்டதாக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை மக்கள் வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Prasanth Karthick
Publish Date: Tue, 24 Nov 2020 (11:43 IST)
Updated Date: Tue, 24 Nov 2020 (11:45 IST)