Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனக்கும் மானம், அவமானம் கிடையாது! - நித்யானந்தா ஓபன் டாக்!

Webdunia
புதன், 4 டிசம்பர் 2019 (12:24 IST)
என்னை பற்றி யார் என்ன சொன்னாலும் நான் பயப்பட மாட்டேன் என நித்தியானந்தா கூறியுள்ளார்.

சமீபகாலமாக நித்யானந்தா மீதும், அவர் ஆசிரமத்தின் மீதும் ஏகப்பட்ட புகார்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. குஜராத் ஆசிரமத்தில் அவர் குழந்தைகளை அடைத்து வைத்த வழக்கில் போலீஸார் அவரை தேடி வருகின்றனர். அவரது குஜராத் ஆசிரமும் மாவட்ட நிர்வாகத்தால் இழுத்து மூடப்பட்டுள்ளது. நித்யானந்தாவையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

ஆனால் அவரோ தான் எங்கே இருக்கிறேன் என்பதையே சொல்லாமல் அடிக்கடி தன் சீடர்களுக்கு வீடியோவில் மட்டும் வந்து பேசி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் வீடியோ வெளியிட்ட நித்யானந்தா நாடு முழுவதும் பலர் தனக்கு எதிராக சதி செய்வதாகவும், யார் என்ன செய்தாலும் தான் பயப்பட போவதில்லை எனவும் கூறியுள்ளார்.

மேலும் சாமியார்களுக்கு மானம், அவமானம் இருக்கக்கூடாது என்று பேசியுள்ள நித்யானந்தா தனது தனி தீவு குறித்த வேலைகளையும் பார்த்து வருவதாக கூறப்படுகிறது.

இவ்வளவு முறை வீடியோவில் வந்து பேசினாலும் தான் எங்கே இருக்கிறேன் என்பதை சொல்ல மாட்டேன்கிறாரே என நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்து வருகிறார்களாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்தி தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments