Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கைலாசாவில் நோ கொரோனா ஃபியர்: நித்தி ஆன் ஃபயர்!!

கைலாசாவில் நோ கொரோனா ஃபியர்: நித்தி ஆன் ஃபயர்!!
, செவ்வாய், 17 மார்ச் 2020 (18:38 IST)
கைலாசாவில் கொரோனா இல்லை, எங்களை பரமசிவன் பாதுகாக்கிறார் என நித்தியானந்தா தெரிவித்துள்ளார். 

 
உலகம் முழுவதும் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால், பல மாநிலங்களில் கொரோனா காரணமாக எமெர்ஜென்சி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 137 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
 
இந்நிலையில் போலீஸாரால் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா கொரோனா வைரஸ் குறித்து அவரது அதிகாரப்பூர்வ டிவிட்டர் தளமாக கருதப்படும் பிஎம்ஓ கைலாஸ் அக்கவுண்டில் ஒரு டிவிட் போடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 
 
கொரோனா வைரஸால் நாங்கள் (கைலாஸ்) பாதிக்கப்படவில்லை. கொரோனா வைரஸ் எங்களைத் தாக்காது. எதிர்காலத்திலும் எங்களைத் தாக்காது. ஏனெனில் பரமசிவன் எங்களைப் பாதுகாத்து வருகிறார். காலபைரவரும் எங்களுக்கு உற்ற துணையாக இருந்து பாதுகாவலாக இருக்கிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை தி-நகரில் கடைகளை மூட உத்தரவு ! மாநகராட்சி ஆணையர் தகவல்