Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவிகளிடம் தவறாக பேசிய விவகாரம்: நிர்மலா தேவிக்கு குரல் பரிசோதனை

Webdunia
புதன், 27 ஜூன் 2018 (15:39 IST)
மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவிக்கு நாளை சென்னையில் குரல் பரிசோதனை நடக்கவுள்ளது.
 
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதில் ஆளுநருக்கு தொடர்பு உள்ளது என்று பலரும் தெரிவித்து வந்தனர். ஆளுநர் இதுகுறித்து விசாரணை நடத்த தனி குழு ஒன்றை அமைத்தார்.
 
இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து சிறையில் உள்ள நிர்மலா தேவியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரை கைது செய்யப்பட்டனர்.
 
இந்நிலையில், நிர்மலா தேவி மாணவிகளிடம் பேசிய ஆடியோவின் உண்மை நிலை குறித்து கண்டறிய அவருக்கு குரல் பரிசோதனை நடத்த மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் மதுரை நீதிமன்றத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னைக்கு வந்தார். நாளை அவருக்கு சென்னை மயிலாப்பூரில் உள்ள தடய அறிவியல் குரல் அலுவலகத்தில் குரல் பரிசோதனை நடக்கவுள்ளது. இதன்பின்னர் அவர் வரும் 29ம் தேதி மதுரை சிறைக்கு திரும்பவுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்