Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படிச்ச ஸ்கூலை மறக்க கூடாது!?; அறிவுறுத்திய மோடி! – விழுப்புரம் வரும் நிர்மலா சீதாராமன்!

Webdunia
செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (12:35 IST)
பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலை ஏற்று தான் சிறு வயதில் படித்த விழுப்புரம் பள்ளிக்கூடத்தை காண நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை புரிவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மத்திய அரசின் 2021-2022ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் நேற்று நடந்து முடிந்தது. இதில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசித்து முடித்தார். தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதங்கள் கூட்டத்தொடரில் நடந்து வருகிறது.

இந்நிலையில் பட்ஜெட் மீதான விளக்கங்களை மக்களுக்கு எடுத்து சொல்லும் பொருட்டு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 15 மாநிலங்களில் கருத்தரங்குகள், விளக்க கூட்டங்களில் கலந்து கொள்ள உள்ளார். இந்நிலையில் தமிழகம் வரும் நிர்மலா சீதாராமன் எதிர்வரும் 13ம் தேதியன்று விழுப்புரம் பாஜக மகளிரணி நடத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

தொடர்ந்து தான் விழுப்புரத்தில் ஐந்தாவது வரை படித்த சேக்ரட் ஹார்ட் கான்வெண்ட் பள்ளிக்கும் நிர்மலா சீதாராமன் செல்ல உள்ளார். பிரதமர் மோடியின் அறிவுறுத்தலை ஏற்று நிர்மலா சீதாராமன் தனது பள்ளியை சுற்றிப்பார்க்க செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments