Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செந்தில் பாலாஜியை எதிர்த்து நிர்மலா பெரியசாமி போட்டியா?

Webdunia
திங்கள், 22 ஏப்ரல் 2019 (09:04 IST)
அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதியில் வரும் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலில் போட்டியிட 200-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில் இன்று அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்படவுள்ளனர். 
 
இந்த நிலையில் அரவக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் செந்தில் பாலாஜியை எதிர்த்து அதிமுக சார்பில் நிர்மலா பெரியசாமி போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என தெரிகிறது. நிர்மலா பெரியசாமியின் சொந்த மாவட்டம் கரூர் என்பதாலும் சாதி ரீதியாக செந்தில் பாலாஜியை எதிர்கொள்ள சரியான போட்டியாக அவர் இருப்பார் என்பதாலும் அவரது பெயர், பட்டியலில் முதல் இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது
 
அதேபோல் சூலூர் தொகுதியில், மறைந்த எம்.எல்.ஏ கனகராஜ் மனைவி ரத்தினம் அல்லது முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமிக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும், திருப்பரங்குன்றம் தொகுதியில் ஏ.கே.போஸின் மனைவி பாக்கியலட்சுமி அல்லது சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் போட்டியிடலாம் என்றும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

பெங்களூரு மருத்துவமனையில் விசிக தலைவர் திருமாவளவன் அனுமதி.. என்ன ஆச்சு?

காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழை பெய்யும்? சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சென்னை அதிகாலை முதல் பரவலாக பெய்த மழை.. கோடை வெப்பத்தில் இருந்து விடுதலை..!

துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்லோவேக்கியா பிரதமர்.. வயிற்றில் 4 குண்டுகள் பாய்ந்ததால் பரபரப்பு..!

இந்த ஆண்டு பருவமழை தொடங்குவது எப்போது? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments