Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி அருகில் தங்கள் கணவர்கள் செல்வதை பெண்கள் விரும்ப மாட்டார்கள்: மாயாவதி

Webdunia
செவ்வாய், 14 மே 2019 (07:40 IST)
பிரதமர் மோடி அருகில் தங்கள் கணவர்கள் செல்வதை பாரதிய ஜனதா கட்சியின் பெண் தலைவர்கள் கூட விரும்ப மாட்டார்கள் என்றும் ஏனெனில் மோடி போலவே தங்களுடைய கணவர்களும் தங்களை விட்டு பிரிந்து விடுவார்களோ என்ற பயம் அந்த பெண் தலைவர்களுக்கு இருக்கும் என்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி சமீபத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசினார். அவரது இந்த பேச்சுக்கு பாஜகவினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் மாயாவதியின் இந்த பேச்சுக்கு மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தனது டுவிட்டரில் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மாயாவதி விமர்சனம் செய்திருப்பதை பார்க்கும் போது அவர் பொதுவாழ்க்கைக்கு தகுதியில்லாதவர் என்பது தெரிகிறது. 
 
அதேபோல் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுகுறித்து கூறியபோது, 'அரசியல் தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாமல் பிரதமர் மோடியின் தனிப்பட்ட வாழ்க்கையை மாயாவதி கடுமையாக விமர்சித்து வருகிறார் என்றும்  மாயாவதியின் இந்த பேச்சு தனக்கு அதிர்ச்சியளிப்பதாகவும், அவர் தனது பேச்சுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments