Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலோபர் கபில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னணி இதுதானா!

Webdunia
திங்கள், 24 மே 2021 (08:10 IST)
அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னணி என்ன என்பது வெளியாகியுள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டார். இது குறித்து வெளியான அறிக்கையில் ‘கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் நிலோபர் கபில் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக் கொள்கிறோம்’ எனக் கூறப்பட்டு இருந்தது.

இந்நிலையில் நிலோபர் செய்தியாளர்களை சந்தித்த போது ‘நான் திமுக எம் எல் ஏ ஒருவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததால் நான் திமுகவில் சேரப்போவதாக நினைத்து கட்சியில் இருந்து நீக்கியுள்ளார்கள். அதற்காக எனக்கு ஒரு நோட்டீஸ் கூட அனுப்பவில்லை. எனது உதவியாளர் பிரகாசம் என்பவர் பணம் பெற்றாரா என்பது பற்றி எனக்கு தெரியாது. அவர் மேல் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நான் திமுகவில் சேருவேனா இல்லையா என்பது உங்களுக்கு விரைவில் தெரிய வரும்’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொல்க்த்தா சட்டக்கல்லூரி மாணவி பலாத்கார வழக்கு: குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்..!

தன்னை மதிக்காமல் திருமணம்! மனைவி, மகனுக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபர்! - நெல்லையில் அதிர்ச்சி!

அயோத்தியில் மெழுகு அருங்காட்சியகம்.. ராமர், சீதா தேவி, லட்சுமணன், அனுமன் சிலைகள் வைக்க ஏற்பாடு..!

டெல்லி மெட்ரோ கட்டணம் திடீர் உயர்வு.. சென்னையிலும் உயர்த்தப்படுமா?

பங்குச்சந்தை இன்று மீண்டும் ஏற்றம்.. காளையின் பிடியில் இருப்பதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments