Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிபின் ராவத் உள்ளிட்ட வீரர்களுக்கு அஞ்சலி; நீலகிரியில் இன்று முழு கடையடைப்பு!

பிபின் ராவத் உள்ளிட்ட வீரர்களுக்கு அஞ்சலி; நீலகிரியில் இன்று முழு கடையடைப்பு!
, வெள்ளி, 10 டிசம்பர் 2021 (09:45 IST)
குன்னூரில் ராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில் இன்று அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நீலகிரி மாவட்டம் முழுவதும் முழு கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊட்டி அருகே குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானதில் முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் இன்று 13 ராணுவ வீரர்கள் உடலும் டெல்லியில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளன.

இந்நிலையில் 13 ராணுவ வீரர்களின் இறப்பிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக விபத்து நடந்த நீலகிரி மாவட்டத்தில் இன்று கடைகள், ஓட்டல்கள் அனைத்தும் முழு கடையடைப்பு அறிவித்துள்ளன. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை எந்த கடைகளும், ஓட்டல்களும் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் சரிந்தது தங்கம் விலை: இன்றைய சென்னை நிலவரம்