Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

Siva
வெள்ளி, 26 ஜூலை 2024 (07:23 IST)
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழை பெய்து வருவதை எடுத்து அந்த மாவட்டத்தில் சில பகுதிகளில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குந்தா ஆகிய வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என்றும் கல்லூரிகள் உட்பட மற்ற அனைத்தும் வழக்கம் போல் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக உதகமண்டலம், குந்தா ஆகிய வட்டங்களில் நேற்றிரவு மிக கனமழை பெய்து வந்ததை எடுத்து அங்கு இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் உள்ளன

இதையடுத்து பள்ளி மாணவ மாணவிகளையும் பாதுகாப்பை கணக்கில் கொண்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குந்தா ஆகிய இரண்டு வட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா கூட்டணியில் இருந்து விலகுகிறோம்: ஆம் ஆத்மி அதிகாரபூர்வ அறிவிப்பு..!

முதல்வர் ஸ்டாலின் சாரி மட்டும் தான் கேட்பார்.. அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் கிண்டல்..!

மாலை நேரத்தில் சென்னை உட்பட 20 மாவட்டங்களை டார்கெட் செய்த மழை!

நாங்க சுந்தரா ட்ராவல்ஸ் இல்ல.. உங்கள முடிச்சு விடப் போற ட்ராவல்ஸ்! - திமுகவிற்கு ஆர்.பி.உதயக்குமார் பதில்!

இலங்கையில் 65 சிறுமிகளின் உடல் தோண்டியெடுப்பு.. எலும்புக்கூடு அருகே பள்ளி பைகள், பொம்மைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments