Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

Siva
வெள்ளி, 26 ஜூலை 2024 (07:23 IST)
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழை பெய்து வருவதை எடுத்து அந்த மாவட்டத்தில் சில பகுதிகளில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குந்தா ஆகிய வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என்றும் கல்லூரிகள் உட்பட மற்ற அனைத்தும் வழக்கம் போல் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக உதகமண்டலம், குந்தா ஆகிய வட்டங்களில் நேற்றிரவு மிக கனமழை பெய்து வந்ததை எடுத்து அங்கு இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் உள்ளன

இதையடுத்து பள்ளி மாணவ மாணவிகளையும் பாதுகாப்பை கணக்கில் கொண்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குந்தா ஆகிய இரண்டு வட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீனவர்களுக்கு அபாண்டமான அபராதம் - வரலாற்று துரோகம்..! மத்திய மாநில அரசுகளுக்கு இபிஎஸ் கண்டனம்.!

டெண்டர் முறைகேடு புகார்.! எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் வழக்குப்பதிவு.!!

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்றிரவு மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

திருவள்ளுவர் பிறந்தநாள் - எந்த ஆதாரமும் இல்லை..! உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!!

பள்ளி வாகனம் பழுது ஏற்பட்டதால் பள்ளி மாணவர்களை இறங்கி வாகனத்தை தள்ளி விடச் சொன்ன தனியார் பள்ளியின் அவலம்!

அடுத்த கட்டுரையில்
Show comments