Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

3 நாட்களுக்கு 18 மாவட்டங்களில் கனமழை! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

3 நாட்களுக்கு 18 மாவட்டங்களில் கனமழை! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
, ஞாயிறு, 22 ஆகஸ்ட் 2021 (12:57 IST)
தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று கனமழை பெய்து வரும் நிலையில் மேலும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இன்று தமிழகத்தில் 13க்கும் அதிகமான மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் மேலும் 3 நாட்களுக்கு 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மைய தகவலின் படி அடுத்த 3 நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, தென்காசி, திண்டுக்கல், மதுரை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், திருவள்ளூர், நீலகிரி, கோவை, கரூர், ஈரோடு ஆகிய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாநிலங்களவைத் தேர்தல்: திமுக வேட்பாளர் இவர்தான்!