Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை: வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை: வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை: வானிலை மையம் தகவல்
, புதன், 31 ஆகஸ்ட் 2016 (15:23 IST)
வட தமிழகத்தின் பல இடங்களிலும் தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


 
 
சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் கூறியபோது, தென் தமிழகம் மற்றும் கன்னியாகுமரி கடலை ஒட்டியுள்ள பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தின் பல இடங்களிலும் தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றார்.
 
ஓரு சில இடங்களில் கனமழையும் அடுத்த 2 நாளுக்கு மழை நீடிக்கும் எனவும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டததுடன் காணப்படும். ஓரிரு முறை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
 
கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. ஒரு சில இடங்களில் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக மன்னார்குடியில் 12 செ.மீ மழையும், உத்தரமேரூர், வாணியம்பாடியில் தலா 11 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என் மார்பகம் பிளாஸ்டிக் தான் அதற்கு என்ன இப்ப? – கடுப்பான நடிகை