ஏடிஎம் இயந்திரத்தில் கருப்பு அட்டை ஒட்டி நூதன திருட்டு.. 3 வட மாநில இளைஞர்கள் கைது..!

Mahendran
திங்கள், 26 மே 2025 (12:16 IST)
சென்னை திருவான்மியூரில் உள்ள வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் கருப்பு அட்டை ஒட்டி நூதன முறையில் பணம் திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
வடமாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் கடந்த வார இறுதியில் சென்னை வந்தனர். இவர்கள் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வெளியே வரும் இடத்தில் கருப்பு நிற அட்டையை ஒட்டி விட்டனர். இதனால், பணம் வெளியே வராமல் மக்கள் ஏமாற்றம் அடைந்து திரும்பினர். பின்னர் அந்த அட்டையை எடுத்து, உள்ளே இருந்த பணத்தை எடுத்து செல்லும் முறையில் இவர்கள் திருட்டு நடத்தினர்.
 
வார இறுதிகளில் தான் அதிக மக்கள் ஏடிஎம் பயன்படுத்துவதால், அந்த நாட்களை குறிவைத்து வாரம் வாரம் இவர்கள் சென்னை வந்துள்ளனர். திருட்டுக்குப் பிறகு ரயிலில் உத்தரப்பிரதேசம் திரும்பியுள்ளனர்.
 
இந்த மோசடியைப் பற்றி மும்பை எஸ்பிஐ தலைமையகம் எச்சரிக்கை விடுத்த பிறகு, போலீசார் தீவிர விசாரணை நடத்தி, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மூன்று பேரையும் கைது செய்தனர். தற்போது அவர்கள் போலீசாரிடம் விசாரணை முகாமில் இருக்கின்றனர்.
 
இந்த கும்பல், சென்னை மட்டுமல்லாமல் பல நகரங்களில் உள்ள ஏடிஎம்களில் இதே முறையில் பணம் திருடியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
 
பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் என்றும், ஏடிஎம்களில் சிக்கல் ஏற்பட்டால் உடனே வங்கிக்கு அல்லது போலீசாருக்கு தகவல் அளிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி மது விற்பனை ரூ.500 கோடியை தாண்டுமா? தயாராகிறது டாஸ்மாக்

பாகிஸ்தானில் இருந்து வந்த 200 ட்ரோன்கள் வழிமறிப்பு.. 287 கிலோ ஹெராயின் பறிமுதல்..!

சீனாவுக்காக அமெரிக்காவை உளவு பார்த்த இந்திய வம்சாவளி? - அமெரிக்காவில் அதிர்ச்சி கைது!

இப்படி எல்லாத்தையும் இழந்து நிக்கிறியே நண்பா! புதினுக்காக கண்ணீர் விட்ட ட்ரம்ப்!

ChatGPTல் 18+ கதைகளையும் இனி கேட்கலாம்: சாம் ஆல்ட்மேன் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments