Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயண அட்டை இருந்தால் தான் வாகனம் நிறுத்த அனுமதி: சென்னை மெட்ரோ அறிவிப்பு..!

Webdunia
புதன், 19 ஏப்ரல் 2023 (10:30 IST)
சென்னை மெட்ரோ வாகன நிறுத்தும் இடங்களில் பயண அட்டை இருந்தால் மட்டுமே வாகனங்களை நிறுத்த அனுமதிக்கப்படும் என சென்னை மெட்ரோ அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அதில் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யாதவர்களும் வாகனத்தை நிறுத்திவிட்டு செல்வதாக புகார் எழுந்தது. 
 
இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனங்களை நிறுத்த இன்று முதல் பயண அட்டை கட்டாயம் என சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் பயண அட்டையை பயன்படுத்தி மெட்ரோவில் பயணம் செய்பவர்களுக்கு 20% தள்ளுபடி அளிக்கப்படும் என்றும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது 
 
இந்த புதிய அறிவிப்பால் மெட்ரோ ரயில் பயணம் செய்பவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments