Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஸ் புதுசுதான்! ஆனால் இரண்டாவது நாளே ப்ரேக்டவுன்

Webdunia
சனி, 7 ஜூலை 2018 (16:15 IST)
தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் வாங்கிய புதிய பேருந்துகள் ஓட தொடங்கிய இரண்டாவது நாளே நடுரோட்டில் பழுதாகி நின்ற சம்பவம் பயணிகளை அதிருப்தியடைய செய்துள்ளது.

 
தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு புதிதாக அரசுப் பேருந்துகள் வாங்கப்பட்டன. 52 பேருந்துகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் இயக்கப்பட்டு வருகிறது. நாகர்கோவில் - திருநெல்வேலி இடையே நடத்துனர் இல்லா 30 பேருந்துகள் இயக்கப்படுகிறது. 
 
இந்த புதிய பேருந்துகள் இயக்கத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 2ஆம் தேதி தொடங்கி வைத்தார். நாகர்கோயில் - திருநெல்வேலி இடையே இயங்கும் நடத்துனர் இல்லா பேருந்து இன்று நடுவழியில் பழுதாகி நின்றது. 
 
புதிய பேருந்துகள் இயங்க தொடங்கிய இரண்டாவது நாளே இப்படி நடந்தது பயணிகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தமிழக பேருந்துகள் சரியாக இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டை தமிழக மக்கள் முன்வைத்து வருகின்றனர்.
 
இந்நிலையில் புதிய பேருந்து பழுது அடைந்த சம்பவம் மேலும் தமிழக மக்களிடையே பேருந்துகளின் தரம் குறித்து கேள்வியை எழுப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments