Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

13 நகரங்களில் புதிய பேருந்து நிலையங்கள்: தமிழ்நாடு அரசு அரசாணை

13 நகரங்களில் புதிய பேருந்து நிலையங்கள்: தமிழ்நாடு அரசு அரசாணை
, புதன், 26 ஜனவரி 2022 (17:32 IST)
13 நகரங்களில் புதிய பேருந்து நிலையங்கள்: தமிழ்நாடு அரசு அரசாணை
தமிழகத்தில் உள்ள 13 நகரங்களில் புதிய பேருந்துகள் கட்டுவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு சற்றுமுன் வெளியிட்டுள்ளது. 
 
முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதும் குறிப்பாக பேருந்துகள் விஷயத்தில் சிறப்பான நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி தமிழ்நாட்டில் உள்ள 13 இடங்களில் புதிய பேருந்து நிலையங்கள் கட்டுவதற்கு நிர்வாக அனுமதியை வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது
 
ஈரோடு, கடலூர், கரூர், காஞ்சிபுரம், திருத்தணி, திருமங்கலம், ராணிப்பேட்டை, திண்டிவனம், திருவண்ணாமலை, மன்னார்குடி, மயிலாடுதுறை, நாமக்கல், சங்கரன்கோவில் ஆகிய நகரங்களில்  புதிய பேருந்து நிலையங்கள் கட்டுவதற்கான நிர்வாக அனுமதியை வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2021ம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித்துறை விருதுகள் அறிவிப்பு!