நெல்லையப்பர் கோவில் தேரோட்டம்! சாதி டீ-சர்ட்டுகள் போட தடை! - காவல்துறை கட்டுப்பாடுகள்!

Prasanth K
வெள்ளி, 4 ஜூலை 2025 (09:33 IST)

திருநெல்வேலியில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில் காவல்துறை பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

 

திருநெல்வேலி நெல்லையப்பர் - காந்திமதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் திருவிழாவும், தேரோட்டமும் விமர்சையாக நடைபெறுகின்றன. இந்த ஆண்டும் தற்போது திருவிழா சிறப்பாக நடந்து வரும் நிலையில், திருவிழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் வருகிற 8ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. 

 

தேரோட்டத்திற்கு பல மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் வருவார்கள் என்பதால் காவல்துறை பல கட்டுப்பாடுகளையும், அறிவுறுத்தல்களையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, அதிக சத்தம் எழுப்பக்கூடிய பீப்பீக்கள் போன்றவற்றை ஊதி இடையூறு செய்யக்கூடாது. சாதியை பிரதிபலிக்கும் வண்ண கயிறுகள், கொடிகள், சாதி பெயர் போட்ட டீசர்ட்டுகள் அணிய, பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சாதி தலைவர்கள் பெயர்களை சொல்லி கோஷம் எழுப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த தேரோட்டத்தின் போது நான்கு ரத வீதிகளிலும் 22 இடங்களில் போலீஸார் கடும் சோதனைகளை நடத்த முடிவு செய்துள்ளனர். ஆயுதங்கள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ரத வீதிகளில் 800 போலீஸார் காவல் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். 

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான் கானை அரசியல் கைதியாக ஏற்கிறதா இந்தியா? பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தகவல்..!

திருப்பரங்குன்றம் மலை தீபம் சர்ச்சை: தர்கா அருகே தீபம் ஏற்றும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!

விஜயின் ரோட் ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுப்பு!...

20 நிமிடங்களில் முறிந்த திருமணம்: மணமகள் மறுத்ததால் ஊர் பஞ்சாயத்தில் விவாகரத்து!

பாஜக வேட்பாளராக போட்டியிடும் சோனியா காந்தி.. தமிழில் அடித்த போஸ்டரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments