மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: நெல்லை பள்ளி தலைமை ஆசிரியர் கைது!

Webdunia
வெள்ளி, 7 ஜனவரி 2022 (12:58 IST)
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நெல்லையை சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கடந்த சில நாட்களாக பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள திசையன்விளை என்ற பகுதியி உள்ள ஒரு பள்ளியில் படித்துவரும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்
 
தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெயகுமார் என்பவரிடம் விசாரணை நடந்து வருவதாகவும் மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்புவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
பள்ளி தலைமை ஆசிரியரே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுகவில் சேர நான் தயார்!. என்னை சேர்த்திக்கிட்டா!.. மனம் திறந்து பேசும் ஓபிஎஸ்!...

கமல்ஹாசன் கட்சியின் டார்ச் லைட் சின்னத்திற்கு திடீர் சிக்கல்.. என்ன காரணம்?

நெல்லை தொகுதியில் மீண்டும் போட்டியிடும் நயினார் நாகேந்திரன்? அவரே அளித்த பதில்..!

அருமை அண்ணன் எடப்பாடி பழனிசாமி.. எங்களை பார்த்தால் பாவமாக இல்லையா? ஓபிஎஸ் பேட்டி

சென்னை நந்தனம் கல்லுரியில் பெண் பாலியல் பலாத்காரம்!.. 3 பேர் கைது!...

அடுத்த கட்டுரையில்