Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லை மாவட்ட ரசிகர்களுடன் ரஜினி திடீர் சந்திப்பு! முதல் அரசியல் கூட்டம் நெல்லையிலா?

Webdunia
வெள்ளி, 23 பிப்ரவரி 2018 (11:56 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒவ்வொரு மாவட்டத்தின் நிர்வாகிகளை நியமனம் செய்து கொண்டு வருகிறார். இந்த நியமனங்கள் முடிந்த பின்னர் முறைப்படி நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் தனது அரசியல் கட்சி குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

இந்த நிலையில் நெல்லை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் திடீரென சென்னைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களை சென்னை ராகவேந்திர திருமண மண்டபத்தில் இன்னும் சற்றுநேரத்தில் ரஜினிகாந்த் சந்திக்கவுள்ளார்.

கமல்ஹாசன் தனது முதல் அரசியல் பொதுக்கூட்டத்தை மதுரையில் பிரமாண்டமாக நடத்திய போலவே ரஜினியும் தென் மாவட்டம் ஒன்றில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக அவர் தேர்வு செய்த இடம் திருநெல்வேலி என்றும் இதுகுறித்து ஆலோசனை செய்யவே நெல்லை மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகள் அழைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்