Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லை திமுக கவுன்சிலர் ராஜினாமா.. ஏற்க மறுத்த மாநகராட்சி ஆணையர்..!

Siva
வெள்ளி, 1 மார்ச் 2024 (15:46 IST)
நெல்லை மாநகராட்சியின் ஏழாவது வார்டு பெண் கவுன்சிலர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்க மாநகராட்சி ஆணையர் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நெல்லை மாநகராட்சியில் மேயர் மற்றும் கவுன்சிலர்கள் இடையிலான மோதல் கடந்த சில மாதங்களாக நடந்து வரும் நிலையில் அது இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று தெரிகிறது.

இந்த நிலையில் நெல்லை மாநகராட்சியின் ஏழாவது வார்டு திமுக கவுன்சிலர் இந்திரா மணி என்பவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக மாநகராட்சி ஆணையரிடம் கடிதம் அளித்திருக்கிறார்.

தன்னுடைய வார்டில் எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை என்றும் அதனால் தான் இந்த ராஜினாமா கடிதத்தை கொடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஒரு கவுன்சிலர் ராஜினாமா கடிதத்தை மேயரிடம் தான் அளிக்க வேண்டும் என்றும் மாநகராட்சி ஆணையரிடம் அளிக்கக்கூடாது என்றும் கூறி அந்த ராஜினாமாவை ஏற்க மறுத்த மாநகராட்சி  ஆணையர் மறுத்துவிட்டார். மேலும் ராஜினாமா கடிதத்தை மேயர் இடம் கொடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இதையடுத்து கவுன்சிலர் இந்திரா மணி மேயரிடம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் அடிதடி சண்டை.. சட்டமன்றத்திற்கு குண்டர்கள் வந்தார்களா?

கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடல்; துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி..!

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments