எங்கும், எப்போதும் அலட்சியம்.. விடியா திமுக அரசுக்கு எனது கண்டனம்.. ஈபிஎஸ்

Mahendran
சனி, 26 ஏப்ரல் 2025 (16:03 IST)
எங்கும், எப்போதும் அலட்சியப் போக்குடனே செயல்படும் முக ஸ்டாலின் மாடல் விடியா திமுக அரசுக்கு எனது கண்டனம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
 
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் 4 பேர் பரிதாபகரமாக உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
 
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
 
ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் ,
கோயில் திருவிழாக்களில் உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்பதாலும் , முறையான பாதுகாப்பும் கொடுப்பதில்லை என்பதாலும்  இதுபோன்ற விபத்துகளுக்கு தொடர்கதையாகி விட்டது .
 
எங்கும், எப்போதும் அலட்சியப் போக்குடனே செயல்படும் முக ஸ்டாலின் மாடல் விடியா திமுக அரசுக்கு எனது கண்டனம்.
 
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கான நிவாரண நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும்; இனி இதுபோன்ற விபத்துகள் நிகழாவண்ணம் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவதற்கு உரிய ஆவன செய்ய வேண்டும் எனவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடியின் பிறந்த நாள் ஒரு கருப்பு நாள்: காங்கிரஸ் பெண் எம்பி விமர்சனம்..!

உருவாகிறது ‘அரபு நேட்டோ’.. 22 நாடுகள் இணைந்து எடுத்த முடிவு..!

இன்றிரவு 18 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வெளியே செல்ல வேண்டாம் என எச்சரிக்கை..!

ஏற்கனவே 3 குழந்தைகள்.. இன்று ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்.. மொத்தம் 7 குழந்தைகள்..!

தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணத்தில் திடீர் மாற்றமா? என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments