NEET தேர்வில்...வஞ்சக வெறித்தனம் வினாத்தாள் தயாரிப்பில் தெரிகிறது - ராமதாஸ்

Webdunia
புதன், 8 ஜனவரி 2020 (18:54 IST)
மருத்துவ படிப்பு படிக்கும் மாணவர்கள்  கட்டாயம் நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி அடைய வேண்டுமென மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், இந்த நீட் நுழைவுத் தேர்வு குறித்து பாமக நிறுவனத் தலைவரும் மருத்துவருமான ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு டுவிட் பதிவிட்டுள்ளார்.
 
அதில், முதுநிலை மருத்துவப் படிப்புக்காக நடத்தப்பட்ட நீட் வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்திருக்கிறது. வினாத்தாள் தயாரித்தவரே அத்தேர்வை எழுதியிருந்தால் கூட  20% வினாக்களுக்கு தவறான விடை தான் எழுதியிருப்பார்.  எப்படியோ நீட்டை உருவாக்கியவர்களின் நோக்கம் நிறைவேறியிருக்கிறது! 
 
நீட் நுழைவுத்தேர்வு என்பது ஏழை,கிராமப்புற, நடுத்தர மாணவர்கள் மருத்துவப்படிப்பில் சேராமல் தடுப்பதற்கான நுழையாத்தேர்வு என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.இப்பிரிவினர் மருத்துவர்களாகி சேவை செய்து விடக்கூடாது என்ற வஞ்சக வெறித்தனம் வினாத்தாள் தயாரிப்பில் தெரிகிறது!  என பதிவிட்டு அதை மத்திய அமைச்சர் ஹர்சவர்தனுக்கு டேக் செய்துள்ளார்.
 
மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவின் தமிழக கூட்டணியில் பாஜக பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்பாராத தோல்வி: பிகார் தேர்தல் முடிவுகள் பற்றி ராகுல் காந்தி கருத்து

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இயக்குனர் வி.சேகர் காலமானர்!...

விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாதா?!.. பொங்கிய நடிகை ரோஜா!...

வந்தே பாரத், தேஜஸ் ரயில்களில் உணவு கட்டாயமா? பயணிகள் மத்தியில் குழப்பம்!

தாம்பரம் அருகே விமானப்படை பயிற்சி விமானம் விபத்து: விமானிகள் என்ன ஆனார்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments