Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்களை ஏமாற்றவே நீட் விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டம்: ஈபிஎஸ் குற்றச்சாட்டு..!

Siva
வெள்ளி, 4 ஏப்ரல் 2025 (14:43 IST)
ஏப்ரல் 9ஆம் தேதி நீட் தேர்வு குறித்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்படும் என தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்த நிலையில், இளைஞர்களையும் மக்களையும் ஏமாற்றுவதற்கு திமுக அரசு நடத்தும் நாடகமே இந்த நீட் தேர்வுக்கான அனைத்து கட்சி கூட்டம் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய போது, "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது. உண்மை நிலையை சட்டமன்றத்தில் பேசினால் வெளிச்சம் காணும் அல்லவா? மக்கள் பிரச்சினைகளில் இந்த அரசு எந்தவித அக்கறையும் இல்லாமல் இருப்பதால், நாங்கள் குரல் எழுப்பி வருகிறோம்.
 
தேர்தலின் போது அளித்த ஒரு வாக்குறுதியை கூட திமுக நிறைவேற்றவில்லை. நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என திமுக வாக்குறுதி அளித்துத்தான் ஆட்சிக்கு வந்தது. நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் தன்னிடம் இருப்பதாக உதயநிதி கூறினார். ஆனால், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என வாக்காக பேசிய முதலமைச்சர் அனைத்து கட்சி கூட்டத்தை மட்டுமே கூட்டியுள்ளார்.
 
நீட் தேர்வு விவகார வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக கூறிவிட்டு, இப்போது கூட்டம் ஏன்? மக்களை ஏமாற்றுவதற்காகவே அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்படுகிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பும், ஆட்சிக்கு வந்த பிறகும் திமுக இரட்டை வேடம் போடுகிறது," என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக்கில் சென்று கொண்டிருந்த போது திடீரென படம் எடுத்த பாம்பு.. இளைஞர் பரிதாப பலி..!

ஏப்ரல் 9ஆம் தேதி மீண்டும் அனைத்து கட்சி கூட்டம்.. முதல்வர் அறிவிப்பு.. என்ன காரணம்?

ராமேஸ்வரம் வரும் பிரதமர் மோடி.. ஈபிஎஸ், ஓபிஎஸ் தனித்தனியாக சந்திக்க திட்டம்..!

கேரள முதல்வர் மகள் மீது லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டு.. பதவி விலக வலியுறுத்தும் எதிர்க்கட்சிகள்..!

மதுரை சித்திரை திருவிழா.. முகூர்த்தக்கால் நட்டு நிகழ்ச்சி தொடக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments