Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் ரிசல்ட் வரும் முன்பே விண்ணப்பிக்கலாம்.. எம்பிபிஎஸ் படிப்புக்கு விண்ணப்பம் தொடக்கம்..!

Siva
வியாழன், 5 ஜூன் 2025 (07:38 IST)
2025ஆம் ஆண்டு நடந்த நீட் தேர்வு முடிவுகள் வரும் 14ஆம் தேதி வெளியாக இருக்கின்ற நிலையில், நீட் தேர்வு முடிவு வருவதற்கு முன்பே எம்பிபிஎஸ் படிப்புக்கு விண்ணப்பம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இளநிலை எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 14ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், ரிசல்ட் வருவதற்கு முன்பே விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
தேர்வு முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்படுவதால், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் குறைவதை தவிர்ப்பதற்காகவே இவ்வாறு முன்கூட்டியே விண்ணப்பிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
 
எனவே, இந்த ஆண்டு எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகங்கை அஜித் குமார் லாக்-அப் டெத் வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!

முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரான நோவா ஸ்மார்ட்போன்.. ஜூலை 5ல் ரிலீஸ். என்னென்ன சிறப்புகள்?

நாளை முதல் ரயில் கட்டணம் உயர்வு.. ஒரு கிமீ-க்கு எவ்வளவு? பயணிகள் அதிர்ச்சி..!

தேனிலவு கொலை எதிரொலி: மேகாலயாவுக்கு சுற்றுலா வருபவர்களுக்கு புதிய அறிவுரைகள்..!

ரூ.100 கோடி செலவில் சாலை போட்ட லட்சணம் இதுதானா? சாலை நடுவே கம்பீரமாக நிற்கும் மரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments