Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீட் தேர்வு விலக்கு மசோதா...உறுதியளித்த ஆளுநர்!

நீட் தேர்வு விலக்கு மசோதா...உறுதியளித்த ஆளுநர்!
, செவ்வாய், 15 மார்ச் 2022 (15:48 IST)
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று தமிழக முதல்வர் மு.க .ஸ்டாலின் சந்தித்துள்ள நிலையில் நீட் விலக்கு மசோதாவை குடியரசுத்தலைவருக்கு அனுப்ப  ஆளுநர் உறுதியளித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக அரசு தாக்கல் செய்த நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார். இதனை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் சட்டமன்ற சிறப்பு கூட்டம் கூடி நீட் விலக்கு மசோதாவை இயற்றி ஆளுநருக்கு அனுப்பி உள்ளது.

இந்த மசோதாவிற்கு ஆளுநரின் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த நிலையில் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வலியுறுத்தி இந்த சந்திப்பு நடக்கும் என்றும் கூறப்பட்டது.

அதேபோல் இந்தச் சந்திப்பில்,  நீட் விலக்கு   மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதாக முதல்வர் ஸ்டாலினிடம் ஆளுநர் ரவி உறுதியளித்துள்ளார்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உக்ரைன் தலைநகரில் ஊரடங்கு: மேயர் அதிரடி அறிவிப்பு!