மாணவிகள் பாலியல் விவகாரம்: டிஜிபியிடம் அறிக்கை கேட்ட தேசிய குழந்தைகள் நல ஆணையம்!

Webdunia
செவ்வாய், 25 மே 2021 (18:20 IST)
மாணவிகள் பாலியல் விவகாரம்: டிஜிபியிடம் அறிக்கை கேட்ட தேசிய குழந்தைகள் நல ஆணையம்!
சென்னையில் உள்ள பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் பாலியல் தொல்லை ஏற்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று காலை ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் பள்ளியின் முதல்வரும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தமிழக காவல்துறையும் கல்வி துறையும் இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் தற்போது தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையமும் இதில் தலையிட்டு உள்ளது 
 
கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்புகள் அதிகமாகி வரும் சூழலில் இதுபோன்ற சம்பவம் வருத்தம் அளிக்கிறது என தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி இது போன்ற குற்றங்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் இது குறித்து முழு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் டிஜிபிக்கு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு உயர்கல்வி உதவித்தொகை: விண்ணப்பிக்க என்ன செய்ய வேண்டும்?

உச்சம் சென்ற வெள்ளி விலையில் திடீர் சரிவு.. தங்கத்தின் நிலவரம் என்ன?

அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? டிசம்பர் 24-ல் அறிவிப்பு: ஓபிஎஸ் தகவல்; பாஜக சமரசம் எடுபடவில்லையா?

கேரள நடிகை பாலியல் வழக்கு: 6 குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிப்பு.. எத்தனை ஆண்டு சிறை?

அமைதிக்கான நோபல் பரிசு வென்ற நர்கிஸ் முகமதி கைது: ஈரான் அரசு அதிரடி..!

அடுத்த கட்டுரையில்