Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவிகள் பாலியல் விவகாரம்: டிஜிபியிடம் அறிக்கை கேட்ட தேசிய குழந்தைகள் நல ஆணையம்!

Webdunia
செவ்வாய், 25 மே 2021 (18:20 IST)
மாணவிகள் பாலியல் விவகாரம்: டிஜிபியிடம் அறிக்கை கேட்ட தேசிய குழந்தைகள் நல ஆணையம்!
சென்னையில் உள்ள பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் பாலியல் தொல்லை ஏற்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று காலை ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் பள்ளியின் முதல்வரும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தமிழக காவல்துறையும் கல்வி துறையும் இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் தற்போது தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையமும் இதில் தலையிட்டு உள்ளது 
 
கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்புகள் அதிகமாகி வரும் சூழலில் இதுபோன்ற சம்பவம் வருத்தம் அளிக்கிறது என தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி இது போன்ற குற்றங்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் இது குறித்து முழு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் டிஜிபிக்கு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்