Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய கல்விக் கொள்கையால் புதுச்சேரிக்கு யூஸ் இல்லை! – முதல்வர் நாராயணசாமி!

Webdunia
ஞாயிறு, 2 ஆகஸ்ட் 2020 (15:37 IST)
மத்திய அரசு தேசிய கல்வி கொள்கைக்கான புதிய கல்வி கொள்கை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் இதனால் புதுச்சேரியில் மாற்றங்கள் ஏற்படாது என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

தேசிய அளவிலான கல்வி திட்டத்தை முன்னெடுக்கும் வகையில் மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தி உள்ளது. ஆனால் இந்த திட்டம் மீண்டும் இந்தி திணிப்பை, மும்மொழி கொள்கையை ஏற்படுத்துவதாக உள்ளது என்றும், இதனால் தமிழக மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்றும் தமிழக எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் புதிய கல்விக் கொள்கை குறித்து பேசியுள்ள புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ”புதிய கல்விக் கொள்கையால் புதுச்சேரியில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. எனினும் மக்களின் கருத்துகளை கேட்ட பிறகே புதிய கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படும்” என அவர் கூறியுள்ளார்.

மேலும் தற்போதைய கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு கல்வி பயில்வதற்கான மாற்று ஏற்பாடுகளை மத்திய அரசு செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேரூர் ஆதீனத்தில் துவங்கிய “ஒரு கிராமம் ஒரு அரச மரம்” திட்டம்! - தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் செயல்படுத்த இலக்கு!

ஸ்டாலின் வைத்த குற்றச்சாட்டு.. சட்டசபை பதிலுரையை புறக்கணித்த வேல்முருகன்!

பட்டப்பகலில் பட்டாக்கத்தி வீசிய கும்பல்! பிரபல ரவுடி கொடூரக் கொலை! - காரைக்குடியில் அதிர்ச்சி!

வீட்டுக்கடன் மோசடி.. விஷாலின் தங்கை கணவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு!

பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம்! அரசின் திட்டத்தை தனியாளாக தொடங்கிய பிரபல யூட்யூபர்!

அடுத்த கட்டுரையில்
Show comments