Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய கல்விக் கொள்கையால் புதுச்சேரிக்கு யூஸ் இல்லை! – முதல்வர் நாராயணசாமி!

Webdunia
ஞாயிறு, 2 ஆகஸ்ட் 2020 (15:37 IST)
மத்திய அரசு தேசிய கல்வி கொள்கைக்கான புதிய கல்வி கொள்கை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் இதனால் புதுச்சேரியில் மாற்றங்கள் ஏற்படாது என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

தேசிய அளவிலான கல்வி திட்டத்தை முன்னெடுக்கும் வகையில் மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தி உள்ளது. ஆனால் இந்த திட்டம் மீண்டும் இந்தி திணிப்பை, மும்மொழி கொள்கையை ஏற்படுத்துவதாக உள்ளது என்றும், இதனால் தமிழக மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்றும் தமிழக எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் புதிய கல்விக் கொள்கை குறித்து பேசியுள்ள புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ”புதிய கல்விக் கொள்கையால் புதுச்சேரியில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. எனினும் மக்களின் கருத்துகளை கேட்ட பிறகே புதிய கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படும்” என அவர் கூறியுள்ளார்.

மேலும் தற்போதைய கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு கல்வி பயில்வதற்கான மாற்று ஏற்பாடுகளை மத்திய அரசு செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சி இருக்கிறது என்பதால் யாரையும் மிரட்டி விடலாமா? திமுகவுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

தேர்தலில் தோல்வி அடைந்தவுடன் அழக்கூடாது. இந்தியா கூட்டணிக்கு அறிவுரை கூறிய ஒவைசி..!

2000 ஆடு மாடுகளுடன் மதுரையில் மாநாடு நடத்தும் சீமான்.. அனுமதி கிடைக்குமா?

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 13 வயது சிறுவன் பிணமாக மீட்பு.. கிருஷ்ணகிரி அருகே பதட்டம்..!

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 15% பெற்றோர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுமா? முதல்வர் ஆய்வு

அடுத்த கட்டுரையில்
Show comments