Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விழுப்புரம் சிறுமி எரித்து கொலை: தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்

Webdunia
திங்கள், 11 மே 2020 (16:30 IST)
விழுப்புரம் சிறுமி எரித்து கொலை
இரு குடும்பத்திற்கு இடையே ஏற்பட்ட முன்பகை காரணமாக விழுப்புரம் சிறுமி கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிர செய்த நிலையில் இதுகுறித்து தானாக முன்வந்து தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் 7 நாள்களுக்குள் இந்த வழக்கு குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை அளிக்கவும் இவ்வாணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே முருகன், கலியபெருமாள் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் பதிவு செய்த வழக்கின் காரணமாக இந்த வழக்கு சுறுசுறுப்பாக விசாரணை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த வழக்கில் நடத்தப்பட்ட விசாரணைகள், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவை ஏழு நாட்களில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தில் மாவட்ட ஆட்சியரால் சமர்ப்பிக்கப்படும் என்றும் அதன்பின்னர் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments