Publish Date: Mon, 04 Nov 2019 (18:29 IST)
Updated Date: Mon, 04 Nov 2019 (18:30 IST)
தெலுங்கானாவில் பெண் வட்டாட்சியரை அலுவலகத்துக்குள் புகுந்து பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் அப்துள்ளப்பூர்மெட்டில் வட்டாட்சியராக பணி புரிந்து வருபவர் விஜயா ரெட்டி. இன்று வழக்கம்போல விஜயா ரெட்டி பணி புரிந்து கொண்டிருந்தபோது உள்ளே நுழைந்த மர்ம கும்பல் விஜயா மீது பெட்ரோலை ஊற்றியுள்ளனர். இதை சற்றும் எதிர்பாராத விஜயா சுதாரிப்பதற்குள் அவர் மீது தீயை பற்றவிட்டு மர்ம கும்பல் தப்பியோடியது.
இந்த சம்பவத்தில் அலுவலகத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார் விஜயாரெட்டி. இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விஜயா லஞ்சம் கேட்டதால் அவர் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
அலுவலகத்துக்குள் புகுந்து பெண் வட்டாட்சியரை கொளுத்தி கொன்ற சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.