Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடராஜனின் உடல் நிலை பாதிப்பு - அப்போலோவில் தீவிர சிகிச்சை

நடராஜனின் உடல் நிலை பாதிப்பு  - அப்போலோவில் தீவிர சிகிச்சை
, திங்கள், 17 ஏப்ரல் 2017 (11:20 IST)
சசிகலாவின் கணவர் நடராஜனின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


 

 
சில மாதங்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார் நடராஜன்.  உடல் சோர்வு, அசதி காரணமாக அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அப்போலோ மருத்துவமனைக்கு சென்றார். மருத்துவர்கள் அவரை சோதித்து முதல்  கட்ட சிகிச்சை அளித்தனர். மேலும், மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெறும் படி மருத்துவர்கள் கூற, நடரஜான் அங்கேயே தங்கியிருந்தார். விரைவில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதாகவும் கூறப்பட்டது.
 
இந்நிலையில், சசிகலாவின் அண்னன் மகன் மகாதேவன், சமீபத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார். இது கேள்விப்பட்டு நடராஜன் மிகுந்த சோகத்தில் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் அவரின் உடல்நிலை மிகவும் மோசமானது. 
 
மருத்துவர்கள் செய்த சோதனையில் அவரது உடலில் உள்ள கல்லீரல் மிககும் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. எனவே, விரைவில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
உடல் நிலை பாதிப்பு காரணமாகவே, மகாதேவனின் இறுதிச் சடங்கில் கூட அவர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரட்டை இலைக்கு ரூ.60 கோடி லஞ்சம்: தினகரன் மீது டெல்லி போலீஸ் வழக்கு!