Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உதயநிதியின் சர்ச்சை பேச்சுக்கு பாஜக பிரமுகர் கொடுத்த பதிலடி!

Webdunia
வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (12:55 IST)
திமுக இளைஞர் அணி செயலாளரும் சென்னை சேப்பாக்கம் தொகுதி வேட்பாளருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று தேர்தல் பிரச்சாரம் செய்தபோது மோடி தொல்லையால் தான் சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி ஆகியோர் இறந்ததாகவும் மோடியின் தொல்லையால் தான் யஷ்வந்த் சின்ஹா என்பவர் வேறு கட்சிக்கு சென்றதாகவும் கூறியிருந்தார் 
 
உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது என்பதும் அரசியல் கட்சி தலைவர்கள் பலர் இதனை கண்டித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பாஜக பிரமுகர் நாராயணன் திருப்பதி என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் உதயநிதியின் இந்த பேச்சு குறித்த வீடியோவை பதிவு செய்து அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் அவர் அதில் கூறியிருப்பதாவதுள்
 
அண்ணாதுரை ன்னு ஒருத்தரு இருந்தாருமா. கருணாநிதியோட தொல்லை தாங்காம இறந்தே போயிட்டாரு. கருணாநிதினு ஒருத்தர் இருந்தாரு. ஸ்டாலின் தொல்லை, அழுத்தம், டார்ச்சர் தாங்காம 'அந்த ஆளு' இறந்தே போயிட்டாரு என்று பதிவு செய்துள்ளார். இந்த டுவிட்டுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை முதல் கூடுதல் 25% வரி.. பாதாளத்திற்கு செல்லும் இந்திய பங்குச்சந்தை..!

ரூ. 117.06 கோடி மோசடி செய்த பிரபல தொழிலதிபர்.. அதிரடியாக கைது செய்த அமலாக்கத்துறை..!

நாளை முதல் இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 25% கூடுதல் வரி விதிப்பு: ட்ரம்பின் உத்தரவு அமல்..

விண்வெளிக்கு முதலில் சென்றது அனுமன் என்பதில் என்ன தவறு? தமிழிசை கேள்வி..!

நாளை முதல் மந்தைவெளி பேருந்து நிலையம் இடமாற்றம்.. மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை மையமும் மாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments