புதிய யூடியூப் சேனலை தொடங்கினார் நாஞ்சில் சம்பத்

Webdunia
வியாழன், 23 ஜூலை 2020 (19:46 IST)
கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக வேலையிழந்த கோடிக்கணக்கானோர்களில் பேச்சாளர்களும் அடங்குவர். குறிப்பாக அரசியல் மேடைகளில் காரசாரமாக பேசும் பேச்சாளர்களுக்கு சுத்தமாக வாய்ப்பு இல்லை. அவர்களுக்கு வேறு வேலையும் தெரியாது என்பதால் வாழ்வாதாரத்திற்காக திணறி வருகின்றனர்.
 
அந்த வகையில் பிரபல அரசியல் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், பேசுவதற்கு மேடை இல்லாத காரணத்தால் தற்போது புதிய யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்துள்ளார். சொல்காப்பியம்’ என்னும் பெயரில் யூடியூப் சேனல் தொடங்கியுள்ள அவர் இதில் தினமும் தனது கருத்துகளையும், உரையையும் வீடியோவாகப் பதிவிட்டு வருகிறார். அரசியல் மட்டுமின்றி தமிழின் பெருமையையும், திராவிடம் குறித்தும் பேச அவர் திட்டமிட்டுள்ளார்.
 
இந்த சேனல் குறித்து நாஞ்சில் சம்பத் கூறுகையில், ’கொரோனா என்னும் கொடிய வைரஸ் நாட்டை முடக்கியது மட்டுமல்ல. நாஞ்சில் சம்பத்தையும் முடக்கிவிட்டது. மேடைகள் வாய்க்காத சூழலில் எண்ணுகிற எண்ணங்களைப் பதிவு செய்ய ஒரு வடிகால் தேவைப்படவே ‘சொல்காப்பியம்’ சேனலைத் தொடங்கினேன்'' என்று கூறியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாட்ஸப் இல்லைன்னா.. அரட்டை யூஸ் பண்ணுங்க! இதுக்கெல்லாம் வழக்கா? - உச்சநீதிமன்றம் அதிரடி!

நாட்டை விட்டு ஓடிய அதிபர்! மடகாஸ்கர் ஆட்சியை கைப்பற்றிய ராணுவம்! - Gen Z புரட்சியால் வந்த வினை!

சொந்த மக்களை சுட்டுக் கொல்லும் ஹமாஸ் குழு! இஸ்ரேல் படை வெளியேறியதும் புதிய பிரச்சினை?

ஒரு பெரிய கட்சி என்.டி.ஏ கூட்டணிக்கு வருகிறது.. விஜய்யை மறைமுகமாக சொன்னாரா வானதி சீனிவாசன்?

4 மடங்கு உயர்ந்த ஆம்னி பஸ் கட்டணம்! எச்சரிக்கைக்கு பிறகு கட்டணம் குறைப்பு! - எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments