Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’கறுப்பர் கூட்டம்’ சுரேந்திரனுக்கு 15 நாள் காவல்: நீதிமன்றம் உத்தரவு

’கறுப்பர் கூட்டம்’ சுரேந்திரனுக்கு 15 நாள் காவல்: நீதிமன்றம் உத்தரவு
, வெள்ளி, 17 ஜூலை 2020 (17:56 IST)
கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறாக விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்ட ’கறுப்பர் கூட்டம்’யூடியூப் சேனல் நிர்வாகிகள் செந்தில் வாசன் மற்றும் சுரேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர் என்பது தெரிந்ததே
 
’கறுப்பர் கூட்டம்’ சேனலின் செந்தில் வாசன் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார் என்பதும் சுரேந்திரன் நேற்று புதுவை காவல் நிலையத்தில் சரண் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட ’கறுப்பர் கூட்டம்’ சுரேந்திரன் சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார் 
 
’கறுப்பர் கூட்டம்’ யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து இழிவாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சுரேந்திரன் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து நீதிபதிகளின் உத்தரவுப்படி சுரேந்திரன் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்
 
கந்தசஷ்டிகவசம் அவதூறாக விமர்சனம் செய்து ’கறுப்பர் கூட்டம்’ குழுவினர்களுக்கு கடும் தண்டனை கிடைக்க வேண்டும் என முருக  பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முப்பாட்டன் முருகனை பழித்துரைப்பதா? சீறிய சீமான்!!