Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏரோப்ளேனே கொடுத்தாலும் தமிழகத்தில் பாஜக மலராது... நாஞ்சில் சம்பத் சுளீர்!

Webdunia
திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (16:46 IST)
ஏரோப்ளேனே வாங்கி கொடுத்தாலும் தமிழகத்தில் பாஜக மலராது என நாஞ்சில் சம்பத் கிண்டலடித்துள்ளார். 
 
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து அரசியல் கட்சிகளிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கூட்டணிப் பேச்சு வார்த்தைகள், முதல்வர் வேட்பாளர் குறித்த பரபரப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகளிடம் இருந்து அதிரடி அறிவிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.  
 
இந்த நிலையில் நேற்று பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் அவர்கள் கட்சியினரிடையே பேசும்போது அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளர்களை வெற்றி பெற வைக்கும் மாவட்ட தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசு அளிக்கப்படும் என்று அவர் கூறியது மாவட்ட தலைவர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  
 
மேலும் தமிழகத்தை பொருத்தவரை திமுக, அதிமுகவின் நிர்வாகிகளுக்கு பரிசு அளிக்கும் வழக்கம் ஏற்கனவே உள்ளதாகவும் அந்த வகையில் தற்போது பாஜக தலைவர்களுக்கு பரிசு அளிக்கும் திட்டத்தை கொண்டு வந்தது என்றும் அவர் கூறினார். 
 
இந்நிலையில் இது குறித்து நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளதாவது, அதிகாரத்தின் மூலம் மிகப்பெரிய துஷ்பிரயோகத்தை செய்ய பாஜக தயாராகி விட்டது. தமிழகத்தில் கால் பதிக்க விரும்பும் அந்த காவிக்கும்பலுக்கு நான் எச்சரிக்கையாகவே சொல்கிறேன். இன்னோவா கார் அல்ல ஏரோப்ளேன் கொடுத்தாலும் தமிழகத்தில் பாஜக மலராது என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments