Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா வந்ததால் மட்டும்தான் அ.தி.மு.கவை காப்பாற்றமுடியும்: நாஞ்சில் சம்பத்

Mahendran
வெள்ளி, 2 பிப்ரவரி 2024 (18:36 IST)
சசிகலா அதிமுக தலைமை பொறுப்பை ஏற்றால் மட்டுமே அதிமுகவை காப்பாற்ற முடியும் என்றும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் தோல்வி அடையும் என்றும் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.  
 
அதிமுகவின் அப்பாவி தொண்டர்கள் சசிகலாவின் வருகைக்காக காத்திருக்கிறார்கள் என்றும் சசிகலா வந்தால் மட்டுமே அதிமுகவை காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை தொண்டர்கள் நெஞ்சில் காலூன்றி விட்டது என்றும் தெரிவித்துள்ளார். 
 
மேலும் தொண்டர்கள் மட்டுமல்ல அதிமுக நிர்வாகிகளும் தற்போது சசிகலா தலைமை ஏற்றால்தான் கட்சியை காப்பாற்ற முடியும் என்று கூறி வருகிறார்கள் என்று தெரிவித்தார் 
 
வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக தோல்வி அடைந்த பின்னர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை பதவியிலிருந்து தூக்கி எறியப்படுவார் என்றும் சசிகலா அதிமுகவை வழிநடத்துவார் என்றும் நாஞ்சில் சம்பத் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments