Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிடிவி தினகரனுக்கு பக்கபலமாக இருந்தேன் - நாஞ்சில் சம்பத்

Webdunia
திங்கள், 19 மார்ச் 2018 (10:57 IST)
டிடிவி தினகரன் பழி வாங்கப்பட்ட பொழுது அவருக்கு பக்கபலமாக இருந்தேன் என நாஞ்சில் சம்பத் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
 
டிடிவி தினகரன் கடந்த வாரம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பை தொடங்கியதால்  அவரது ஆதரவாளர் நாஞ்சில் சம்பத், நேற்று முந்தினம்  அண்ணாவும் திராவிடமும் இல்லாத இடத்தில் நான் இல்லை. அமமுக என்ற பெயரில் எனக்கு உடன்பாடு இல்லை. டிடிவி தினகரனின் அநிநாயத்தை என்னால் தாங்க முடியாது. அண்ணா திராவிடம் என்பதை தவிர்த்து என்னால் பேச முடியாது. அரசியலில் இருந்தும் நான் விலகுகிறேன். எந்த கட்சியிலும் நான் இல்லை என்று கூறியிருந்தார்.
 
இதற்கு பதில் அளித்த டிடிவி தினகரன் பேசியபோது, அண்ணாவையும், திராவிடத்தையும் அவமதிக்கவில்லை, நாஞ்சில் சம்பத் அமைப்பிலிருந்து விலகியது வருத்தமளிக்கிறது என்று பேசினார்.
 
இந்நிலையில், நாஞ்சில் சம்பத் தனது டுவிட்டர் பக்கத்தில், 
 
“இன்னல் சூழ்ந்த காலகட்டத்தில் டி.டி.வி.தினகரன் அவர்களுக்கு துணை நின்றேன், தோள் கொடுத்தேன், அநியாயமாக அவர் பழி வாங்கப்பட்டப் பொழுது அவருக்கு பக்கபலமாகவும், தக்கதுணையாகவும் இருக்க தீர்மானித்தேன்.
 
அவரை சிகரத்திற்குக் கொண்டுச்செல்ல என் சிறகுகளை நான் அசைத்தேன். ஆனால் ஒரு ராஜாளிப் பறவை காலுக்கு கீழே சிக்கிய புழுவை பார்ப்பதை போன்றுதான் என்னை பார்த்தார்கள். என்னை விரும்பாத இடத்தில் இருக்க விருப்பம் இல்லை, அதனால் தான் கவலையோடு வெளியேறினேன்” என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments