Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கணவரின் முகத்தை கூட சென்று பார்க்காத நந்தினி.....

கணவரின் முகத்தை கூட சென்று பார்க்காத நந்தினி.....
, புதன், 5 ஏப்ரல் 2017 (12:06 IST)
விஜய் தொலைக்காட்சி தொடரில் வெளியான சரவணன் மீனாட்சி தொடர் மூலம் ரசிகர்களுடன் பிரபலமான நடிகை ‘மைனா’ நந்தினியின் கணவர் கார்த்திகேயன் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார்.


 

 
அரசு வேலை வாங்கி தருவதாக கூரி பலரிடம் அவர் பண மோசடி செய்திருந்ததாகவும், தன்னிடம் கூட ரூ.20 லட்சம் வரை அவர் பண மோசடி செய்துள்ளார் எனவும் நந்தினி கூறியிருந்தார். மேலும், வேறு பெண்ணுடன் அவருக்கு தொடர்பு இருந்தது. அந்த பெண் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக எனது கணவரை போலீசார் கைது செய்தனர். இது எனது குடும்பத்தினருக்கு மன வேதனையை ஏற்படுத்தியது. எனவே, நான் எனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டேன். இந்நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்”என கூறியுள்ளார்.
 
ஆனால், தன்னுடைய தற்கொலைக்கு நந்தினியின் தந்தை ராஜேந்திரனின் டார்ச்சர்தான் காரணம். நந்தினியிடம் என்னை பேசவிடாமல் அவர் என்னை தடுத்து வந்தார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் நான் தற்கொலை செய்து கொள்கிறேன்” என அவர் கூறியுள்ளார்.
மேலும், தனது மகனின் மரணத்திற்கு காரணமான நந்தினி மற்றும் அவரது தந்தை ஆகியோரை சும்மா விட மாட்டேன். அவர்களின் மீது போலீசாரிடம் புகார் அளிக்க உள்ளேன் என கார்த்திகேயனின் தாய் சாந்தி கூறியிருந்தார்.
 
மேலும், மரணமடைந்த தனது கணவர் கார்த்திக்கின் உடலை கூட இன்னும் நந்தினி வந்து பார்க்கவில்லை என சாந்தி கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குள்ளநரி ஓபிஎஸ்: விளாசும் டாக்டர் நமது எம்ஜிஆர்!