Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 சிறுமிகளை 6 மாதங்களாக வன்கொடுமை செய்து கொடூரம்! – நாமக்கலில் பரபரப்பு!

Webdunia
திங்கள், 12 அக்டோபர் 2020 (14:44 IST)
நாமக்கல் அருகே இரண்டு சிறுமிகளை கடந்த ஆறு மாதங்களாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக நாட்டில் நடைபெறும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில் நாமக்கல் அருகே சிறுமிகள் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராசிபுரத்தை சேர்ந்த 12 மற்றும் 13 வயதுடைய இரு சிறுமிகளை 75 வயது முதியவர் உட்பட 6 பேர் கடந்த 6 மாதங்களாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்த சம்பவம் அம்பலமாகியுள்ளது. அதை தொடர்ந்து முதியவர் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

அடுத்த கட்டுரையில்