நூல் விலை உயர்வு; மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம்!

Webdunia
புதன், 18 மே 2022 (09:41 IST)
நூல் விலை உயர்வை கண்டித்து கடந்த இரண்டு நாட்களாக பின்னலாடை நிறுவனங்கள், தொழிலாளர்கள் போராட்டம் நடத்திய நிலையில் இன்றும் போராட்டம் தொடர்கிறது.

பின்னலாடை உற்பத்திக்கு மூலப்பொருளான நூலின் விலை கட்டுக்கடங்காத அளவு விலை உயர்ந்துள்ளது பின்னலாடை நிறுவனங்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து நூல் விலை உயர்ந்து வரும் நிலையில் விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் முதலாக கரூர், ஈரோடு, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட 6 மாவட்டங்களை சேர்ந்த பின்னலாடை நிறுவனங்கள், தொழிலாளர்கள் முழு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்தித்து நூல் விலை கட்டுப்படுத்துவது குறித்து தமிழக அமைச்சர்கள் பேச உள்ளனர். இந்நிலையில் இன்றும் நூல் விலை உயர்வை கண்டித்து நாமக்கல் விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைவார்களா?!.. என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?!...

கோவை வந்த செங்கோட்டையன் பயணம் செய்த விமானம் பெங்களுருக்கு திருப்பிவிடப்பட்டது.. என்ன காரணம்?

'டிட்வா' புயலால் பாம்பனில் சூறைக்காற்று, தனுஷ்கோடியிலிருந்து மக்கள் வெளியேற்றம்!

பீகாரில் காங்கிரஸ் தோல்விக்கு காரணம் ராகுல், பிரியங்கா தான்: அகமது படேலின் மகன் பகீர் குற்றச்சாட்டு

வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு மாணவர்களை பயன்படுத்துவதா? ஆசிரியர்கள் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments