தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பாராளுமன்றத்தில் கமல் பேசியது பற்றி கருத்து தெரிவித்த அவர் தமிழை வைத்துக் கொண்டு பிச்சை எடுக்க முடியாது என பெரியார் சொன்னதைத்தான் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்ட பேசினார்.. அது தெரியாமல் கமல்ஹாசன் எதையோ உளறிக் கொண்டிருக்கிறார்.. கமல்ஹாசனுக்கு இது தெரியவில்லை என்று கூறினார்..
மேலும், ஒரு கவுன்சிலர் கூட ஆகாத விஜய்க்கு அதிமுகவை பற்றி பேசி என்ன தகுதி இருக்கிறது.. இன்னும் விசிலை அடித்துக் கொண்டிருந்தாலும் ஒன்றும் நடக்காது. எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோது 11 மருத்துவ கல்லூரிகள் தமிழகத்திற்கு வந்தது.. ஆனால் ஸ்டாலின் ஒரு மருத்துவமனையை கொண்டுவந்தாரா?.. கேட்டால் டப்பா இஞ்சின் என சொல்கிறார்.. தமிழகத்தில் நடைபெறுவது கஞ்சா இன்ஜினா? என்று அவர் கேள்வி எழுப்பினார்..
கடந்த தேர்தலில் திமுக கொடுத்த 525 வாக்குறுதிகளில் 70 வாக்குறுதிகளை கூட திமுக நிறைவேற்றவில்லை. கேட்டால் மத்திய அரசு எதுவும் செய்யவில்லை என தொடர்ந்து சொல்லி வருகிறார்கள்.. திமுக ஆட்சி விரட்டியடிக்க வேண்டும் என அவர் பேசியிருக்கிறார்.