Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குளத்தில் கலந்த விஷம்; காட்டிக்கொடுத்த மீன்கள்! – நாகூரில் அதிர்ச்சி!

Webdunia
ஞாயிறு, 20 செப்டம்பர் 2020 (13:23 IST)
நாகூர் சிவன் கோவிலுக்கு சொந்தமான குளத்தில் விஷம் கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகூரில் நாகநாதசுவாமி கோவில் என்ற புகழ்பெற்ற சிவன் கோவில் உள்ளது. அங்குள்ள குளத்தில் பக்தர்கள் நீராடுவது வழக்கம், அதுமட்டுமல்லாமல் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் பலர் குளிப்பது, துணி துவைப்பது போன்றவற்றிற்கும் அந்த குளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மக்கள் சிலர் அதிகாலையில் குளிக்க குளத்திற்கு வந்தபோது மீன்கள் செத்து மிதந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் தண்ணீரில் நிறம் மாற்றமாக தென்பட்டதால் எடுத்து முகர்ந்தபோது ரசாயன நெடி வீசியுள்ளது. இதுகுறித்து மக்கள் அளித்த புகாரின்பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மக்கள் மீன்கள் இறந்து கிடப்பதை கண்டு உஷாரானதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குளத்தில் யார் விஷத்தை கலந்திருப்பார்கள் என்று போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments